பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 2000 மரக்கன்றுகள் வழங்கல்

IT TEAM
0

 


பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன் சங்கம் சார்பில், பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி, அதன் மூலம் பசுமை உலகை உருவாக்குவோம் என்ற உயரிய நோக்கத்தோடு, இயற்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பேராவூரணி கோக்கனட்சிட்டி  இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், இன்று பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு 2000 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு, சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் க.குமரன் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தனலட்சுமி, மரக்கன்றுகளை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்வில், மாவட்ட காந்தி ஜெயந்தி தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி, முதல் நிலைத் தலைவர் ராஜ்குமார், முன்னாள் செயலாளர்கள் டிவி குமார், எம்எஸ்.ஆறுமுகம், முன்னாள் பொருளாளர் சங்கர் ஜவான், லட்சுமி மெடிக்கல்ஸ் பாலமுருகன், சென்னை செப்பல்ஸ் செந்தில் ஆறுமுகம், சுப.பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.  மரக்கன்றுகளை செவ்வனே பேணி வளர்க்கும் பள்ளி மாணவிகளுக்கு தன் சொந்த செலவில் ரூபாய் 5000 ஊக்க தொகையாக வழங்குவதாக சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் அறிவித்தது, மாணவிகள் மத்தியில் மிகுந்த கரகோஷத்தை ஏற்படுத்தியது. இறுதியாக, சங்க பொருளாளர் ஆவி.ரவி நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top