*பேராவூரணி ஒன்றிய ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி*
பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் 1 முதல் 5வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்து மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி பேராவூரணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்கு நாட்கள் நடைபெற்றது இப்பயிற்சிக்கு
பேராவூரணி வட்டார கல்வி அலுவலர் அங்கையற்கன்னி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் கலா ராணி முன்னிலை வகித்தார். பயிற்சிக்கு வருகை தந்த அனைவரையும் வட்டார வள மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார்.இப்பயிற்சியில் 200க்கு மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் பயிற்ச்சியில் ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் மாணவர்களின் அடிப்படை திறன்களுகள் வளர்பது குறித்து பயிற்சி நடைபெற்றது இப்பயிற்ச்சிக்கு வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டானர் இறுதியில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சாஷிதாபானு நன்றி கூறினார்.பயிற்சிகான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செய்திருந்தார்.