பேராவூரணி குமரப்பா மேல்நிலைப் பள்ளியில் ஜே.ஸி.குமரப்பாவின் 133வது பிறந்தநாள் விழா நடந்தது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்து, ஜே.ஸி. குமரப்பாவின் 133 வது பிறந்த நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி, மாணவர்களிடம் பேசுகையில்,
உலகத்தின் பல்வேறு பொருளாதார அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற குமரப்பா, கடந்த 1953ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியிலுள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தங்கி, சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார். தற்சார்பு பொருளாதாரத்தின் தந்தை குமரப்பாவை நினைவு கூர்வது ஒவ்வொரு காந்தியவாதிகளின் கடமை மட்டுமல்ல தனிமனிதர்களின் கடமையும் நன்றியறிதலுமாகும் என்றார். தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, அகாடமிக் டைரக்டர் அஸ்வின்கணபதி, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், குமரப்பா அறக்கட்டளை செயலர் நபிசாபேகம், முதல்வர் சர்மிளா, நிர்வாக அலுவலர் சுரேஷ், ஆசிரியர்கள் மூர்த்தி, விஜய், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.