பேராவூரணி தாலுக்கா நாடியம் ஊடையக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார் சுவாமி பரிவார தெய்வங்கள் ஆலய மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது. மகா யாகசாலை பூஜை காலங்களில் வேத பாராயணமும், திருமுறை பாராயணமும், நாதஸ்வர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. மதியம் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ரங்கசாமி நாடார் மற்றும் ராமன் நாடார் வம்சத்தினர் செய்திருந்தனர்.