சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் காரல் மார்க்ஸ் நினைவு தினக் கொடியேற்று நிகழ்ச்சி

IT TEAM
0 minute read
0

 


 தஞ்சாவூர், மார்ச்.15 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், மாமேதை கார்ல மார்க்ஸ் நிநினைவு தினக் கொடியேற்று நிகழ்ச்சி வெள்ளிக்கிழமையன்று ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மூத்த தோழர் வீ.கருப்பையா ஆகியோர் பங்கேற்று சேதுபாவாசத்திரம், காரங்குடா, கழுமங்குடா, செந்தலைப்பட்டினம், பூவாணம் ஆகிய கிளைகளில் செங்கொடி ஏற்றினர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டு விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. பூவாணம் கிளையின் சார்பில், அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 7 ஆயிரத்து 500 மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரனிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில், ஒன்றியக்குழு உறுப்பினர் நவநேசன், கிளைச் செயலாளர் எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top